May 14, 2026 - 04:10 PM -
0
தொடரும் கன மழைக் காரணமாக கொத்மலை - கம்பளை (B 431) பிரதான வீதி இன்று (14) முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பரகம்மன பகுதியில், மீண்டும் வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேநேரம் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் போது மண்சரிவு தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
