Header Logo

வணிகம்
25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், நெருக்கடி கால சகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு குறித்த பன்னாட்டு மாநாடும் இணைந்து கொண்டாடும் CEPA

May 14, 2026 - 05:28 PM -

0

25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், நெருக்கடி கால சகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு குறித்த பன்னாட்டு மாநாடும் இணைந்து கொண்டாடும் CEPA

வறுமை ஆய்வு மையமான Centre for Poverty Analysis (CEPA) தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நெருக்கடி கால சகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு எனும் கருப்பொருளின் கீழ், 2026 மே 07 மற்றும் 08 ஆகிய இரு நாட்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பன்னாட்டு மாநாடொன்றை நடத்தியது. இந்த மாநாடு CEPA ஆல் ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ODI Global ஆகியவற்றுடனான ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மேம்பாட்டு கூட்டாளிகள், கல்விமான்கள், துறை நடைமுறை நிபுணர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்த இரு நாள் மாநாடு, பொருளாதார, சமூக, காலநிலை மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது பின்தங்கிய சமூகங்களைப் பாதுகாத்தல், மீள்திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டுப் பாதைகளை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவை தொடர்பான சரியான நேரத்தில் உரையாடலுக்கான மேடையாக அமைந்தது. 

CEPA at a Glance விளக்கக்காட்சி, CEPA தலைவர் நெளன் குணசேகர அவர்களின் வரவேற்பு உரை, ஆசிய மேம்பாட்டு வங்கியின் இலங்கை பணிப்பாளர் ஷானன் கவுலின் அவர்களின் உரை, CEPA நிறுவன உறுப்பினர்கள் மற்றும் நீண்டகால பணியாளர்களின் பாராட்டு, CEPA பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சிரிமல் அபேரத்ன அவர்களின் உரை, ஆவணப்படம் ஒன்றின் காட்சிப்படுத்தல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர அவர்களின் முக்கிய சொற்பொழிவு ஆகியவற்றையும் உள்ளடக்கியது. 

இங்கு கருத்துத் தெரிவித்த பேராசிரியர் சிரிமல் அபேரத்ன, வறுமை மற்றும் அது தொடர்பான மேம்பாட்டு சவால்கள் குறித்து செயல்படும் சுயாதீன சிந்தனை மையமாக, கடந்த 25 ஆண்டுகளில் CEPA வழங்கிய பங்களிப்பை வலியுறுத்தினார். இலங்கையின் கொள்கை வகுப்பு செயல்முறைக்கும் பொது மக்களின் உரையாடலுக்கும் சாட்சி அடிப்படையிலான ஆராய்ச்சிக் கருத்துக்களை வழங்குவதில் CEPA முக்கிய பங்காற்றி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வறுமை என்பது பணப் பற்றாக்குறை மட்டுமல்ல, அது வாய்ப்புகளின் பற்றாக்குறை, அதிகாரப்படுத்தலின் பற்றாக்குறை மற்றும் மரியாதையின் பற்றாக்குறையுமாகும் என்று பேராசிரியர் அபேரத்ன கூறினார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அண்மைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வறுமை குறைப்புப் பயணம் கடுமையான சவாலுக்கு உள்ளாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் வறுமையைக் குறைப்பது மட்டுமன்றி அதை நிலையான முறையில் மேற்கொள்வதும், மீள்திறனைக் கட்டியெழுப்புவதும், சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மையை உறுதிப்படுத்துவதும் அவசியமென வலியுறுத்தினார். 

முக்கிய சொற்பொழிவாற்றிய கலாநிதி சந்திரநாத் அமரசேகர, நெருக்கடி சூழ்நிலைகளில் ஏழை மற்றும் பின்தங்கிய மக்களைப் பாதுகாப்பதற்கு, பெரும் பொருளாதார நிலைத்தன்மை, வலுவான நிறுவன நம்பிக்கை மற்றும் சாட்சி அடிப்படையிலான கொள்கை வகுப்பு ஆகியன இன்றியமையாதவை என சுட்டிக்காட்டினார். 2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து பெறக்கூடிய பாடங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், நெருக்கடிகள் பெரும்பாலும் ஒரே ஒரு காரணத்தினால் அல்ல, மாறாக பலவீனங்கள் பல ஒருசேரக் குவியும்போதே எழுகின்றன என்று குறிப்பிட்டார். 

அவர், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான இடமோ நெருக்கடி ஏற்பட்ட பின்னரன்றி, அதற்கு முன்னரே கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், வறுமை தொடர்பான காலோசிதமான, துல்லியமான மற்றும் உயர்தரத் தரவுகளின் அவசியத்தையும், ஆராய்ச்சி முடிவுகளை செயலாக்கக்கூடிய கொள்கைக் கருத்துக்களாக மாற்றுவதில் CEPA போன்ற நிறுவனங்களின் பங்கினையும் அவர் சுட்டிக்காட்டினார். 

மாநாட்டின் முதல் நாளில் முக்கிய கவனம், நிச்சயமற்ற உலகளாவிய சகாப்தத்தில் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான வர்த்தக மற்றும் பொருளாதார சீர்திருத்தச் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற உயர்நிலை முதன்மை அறிஞர் அமர்வின் மீது திரும்பியது. ODI Global மற்றும் CEPA ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வு, ODI Global-இன் பன்னாட்டுப் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் பணிப்பாளரும் முதன்மை ஆராய்ச்சி உறுப்பினருமான பேராசிரியர் டர்க் வில்லெம் தே வேல்டே அவர்களின் நடுநிலையாக்கத்தில் நடைபெற்றது. இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புகள், வர்த்தகச் சீர்திருத்தங்கள், நிதித் துறை, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய நிலையாமைக்கு மத்தியில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விரிவான உரையாடல் அங்கு இடம்பெற்றது. 

இந்த அமர்வில் சிறப்புக் கருத்துக்களைத் தெரிவித்த ODI Global-இன் கெளரவ உறுப்பினரான சர் வின்ஸ் கேபிள், இலங்கைக்கு இந்தியா மற்றும் பரந்த பிராந்தியத்துடனான வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தும் பெரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். தெற்காசிய உலகிலேயே மிகக் குறைந்த பிராந்திய ஒருங்கிணைப்பைக் கொண்ட பிராந்தியமாகும் என்பதை வலியுறுத்திய அவர், பிராந்திய வர்த்தகத்தை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை கணிசமான பொருளாதாரப் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டினார். இந்தியா–இலங்கை விடுதலை வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பித்தலும், பிற முக்கியச் சந்தைகளுடன் ஆழமான பொருளாதார உறவுகளை வளர்த்துக்கொள்ளுதலும் அவசியம் எனவும் அவர் கூறினார். 

வர்த்தகம், வாணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, இலங்கை வெளிப்புற அழுத்தங்கள், பணம் மற்றும் கடன் நெருக்கடிகள், அன்னியச் செலாவணி வரம்புகள், கடன் நிலைத்தன்மை, ஆட்சி முறையில் உள்ள பலவீனங்கள் மற்றும் விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப இடைவெளி உள்ளிட்ட ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட பல பலவீனங்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். வெளிப்புறச் சூழல் தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருப்பதால், நிலைப்படுத்த முடிவதுச் சூழலை அன்றி, அதற்குப் பதிலளிக்கக்கூடிய அறிவார்ந்த மற்றும் நிலையான கொள்கை கட்டமைப்பையே நிலைப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title