Header Logo

செய்திகள்
சர்ச்சைக்குள்ளான உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு

May 16, 2026 - 03:25 PM -

0

சர்ச்சைக்குள்ளான உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு

தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், 2019ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட MOP உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார். 

குறித்த உரம் பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பதை மாதிரிப் பரிசோதனையின் பின்னரே கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் மஹ கனதராவ பிரதேசத்தில் உள்ள ரம்பேவ விவசாய சேவை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பண்டு காபயபுர விவசாயிகளுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டில் மானியமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட உரத் தொகுதி ஒன்று இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக நேற்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ விவசாய சேவை மத்திய நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த MOP உரமானது, 2019ஆம் ஆண்டு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மற்றும் காலாவதியான உரம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title