May 17, 2026 - 07:49 PM -
0
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்று (17) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விக்னேஷ் ஐயர் 73 ஓட்டங்களையும், விராட் கோலி 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
இந்நிலையில், 223 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இதன்படி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதல் அணியாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
