Header Logo

விளையாட்டு
ராஜஸ்தான் வெற்றியால் சி.எஸ்.கே.வுக்கு சிக்கல்?

May 20, 2026 - 10:08 AM -

0

ராஜஸ்தான் வெற்றியால் சி.எஸ்.கே.வுக்கு சிக்கல்?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல். 2026 பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஒரு முக்கிய படியை எடுத்து வைத்துள்ளது. 

நேற்று ஜெய்ப்பூரில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 220 ஓட்டங்களை குவித்தது. 

துடுப்பாட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் அபாரமாக 96 ஓட்டங்களையும், ஜோஷ் இங்லிஸ் 60 ஓட்டங்களையும் பெற்றனார். 

பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

221 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 93 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 53 ஓட்டங்களையும் பெற்றனார். 

பந்து வீச்சில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக மோசின் கான் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. 

இது பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஒரு கெட்ட செய்தியாக அமைந்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களின் கடைசி குரூப் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அவர்கள் 14 போட்டிகளில் இருந்து 16 புள்ளிகளை பெற்றிருப்பார்கள். வேறு எந்த அணியாலும் 16 புள்ளிகளை எட்ட முடியாது என்பதால், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இது அவர்களுக்கு போதுமானதாக இருக்கும். 

ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களின் மீதமுள்ள ஆட்டத்தில் தோற்றால், அவர்கள் 14 புள்ளிகளில் 14 புள்ளிகளுடன் இருப்பார்கள். அந்த சூழ்நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தங்களின் மீதமுள்ள ஆட்டங்களில் ஒன்றிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் தங்களின் மீதமுள்ள ஆட்டத்திலும் தோற்க வேண்டும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு போட்டிகளில் வென்றாலோ அல்லது பஞ்சாப் கிங்ஸ் தங்களின் மீதமுள்ள ஆட்டத்தில் வென்றாலோ, ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேற்றப்படும். 

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களின் ஆட்டங்களில் தோற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களின் கடைசி ஆட்டத்தில் வென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 14 புள்ளிகளில் சமநிலையில் இருக்கும். அந்த நிலையில், ரன் ரேட் (NRR) அடிப்படையில் யார் பிளேஆஃப் சுற்றுக்கு செல்கிறார்கள் என்று தீர்மானிக்க முடியும்.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title