May 20, 2026 - 11:09 AM -
0
Prime Group இலங்கையில் மூன்று தசாப்த கால ரியல் எஸ்டேட் சிறப்பை கொண்டாடி வரும் நிலையில், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் என்பது வியாபார நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய துறைகளில் விளையாட்டும் ஒன்றாகும் என்பதையும் உணர்ந்து செயலாற்றி வருகிறது. இளைஞர் வலுவூட்டல், சமூக அபிவிருத்தி மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு போன்றவற்றில் பெருமளவு கவனம் செலுத்தும் Prime Group, நாட்டின் அடுத்த தலைமுறையை தயார்ப்படுத்தி வழிநடத்துவதில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
சமூக ஈடுபாடு மற்றும் விளையாட்டு அபிவிருத்திக்கான தமது அர்ப்பணிப்பை ஆழப்படுத்தும் வகையில், Prime Group தேர்ஸ்டன் கல்லூரி ரக்பி 1st XV தலைமைத்துவ அணிக்கு பிளாட்டினம் அனுசரணையை வழங்கியுள்ளது.
இந்தப் பங்காண்மையினூடாக, இளம் விளையாட்டு வீரர்களிடம் ரக்பி விளையாட்டு உருவாக்கும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் குழுப்பணி ஆகியவற்றை Prime Group ஆதரிக்கின்றது. இந்த விழுமியங்கள் ஆடுகளத்திற்கும் எந்தவொரு பருவ காலத்திற்கும் அப்பால் நிலைத்து நிற்கக்கூடியவை. மரியாதையும் திறமையும் சமமாக மதிக்கப்படும் ஒரு விளையாட்டில், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் இந்த இளம் வீரர்களை ஆதரிப்பதிலும் கொண்டாடுவதிலும் Prime Group பெருமையடைகின்றது.
Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “தேர்ஸ்டன் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற ரீதியில், கல்லூரியின் 1st XV ரக்பி தலைமைத்துவ அணிக்கு ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன். தேர்ஸ்டன் கல்லூரியுடனான எனது காலப்பகுதியானது எனது தனிப்பட்ட மற்றும் தொழில்சார் பயணத்தை வடிவமைத்ததுடன்; தலைமைத்துவம், ஒழுக்கம், குழுப்பணி மற்றும் மீளெழுச்சித் திறன் ஆகிய விழுமியங்களையும் என்னுள் விதைத்தது. விளையாட்டுத்திறனூடாக வளர்த்தெடுக்கப்பட்ட இந்தப் பண்புகள் இன்றும் என்னை வழிநடத்தி வருகின்றன. அணிக்கு நான் வழங்கும் இந்த ஆதரவானது, எனது பாடசாலைக்கு செலுத்தும் நன்றிக்கடனாவதுடன், இளைஞர்கள் தங்களது திறமையின் ஊடாக மேன்மையை நோக்கித் தொடர்ந்தும் பயணிக்க அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு அர்ப்பணிப்புமாகும்.” என்றார்.
இலங்கையின் வளர்ச்சிக்காக கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு முன்னணி குழுமமாகிய Prime Group, தேர்ஸ்டன் கல்லூரி ரக்பி அணியுடன் இணைந்து செயல்படுவது, விளையாட்டு மற்றும் இளைஞர் திறன்வளர்ச்சியை ஊக்குவிக்கும் தனது உறுதிப்பாட்டின் இயல்பான தொடர்ச்சியாகும். இந்தப் பங்காண்மை, போட்டியின் இறுதி விசிலுக்குப் பின்னரும் அணியின் உற்சாகம், ஒற்றுமை மற்றும் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
