May 20, 2026 - 11:14 AM -
0
சிறந்த நாற்பது நிறுவனங்களில் ஒன்றாகவும், தனியார் துறை பொதுகாப்புறுதி பிரிவில் துறை வெற்றியாளராகவும் அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் அங்கீகரிக்கப்பட்டது.
அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் மருத்துவ உரிமை கோரல்கள் குழுவானது, முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு திறனில் சிறப்பை வெளிப்படுத்தியதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான CPM சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன (BMPC) விருதுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் நிறுவனம் சிறந்த நாற்பது நிறுவனங்களில் ஒன்றாகத் தரவரிசைப் பெற்றதுடன், தனியார் துறை பொது காப்புறுதிப் பிரிவில் துறை வெற்றியாளராகவும் அங்கீகரிக்கப்பட்டது. இது அதன் வலுவான செயல்பாட்டு கட்டமைப்பையும் ஒழுங்குமுறை கொண்ட செயலாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த அங்கீகாரம், கட்டமைக்கப்பட்ட பணிச்சூழல்கள், செயல்முறை அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் திறன்களின் ஒருங்கிணைப்பு மூலம் தனது உரிமை கோரல்கள் முகாமைத்துவ செயல்முறைகளை மேம்படுத்த நிறுவனமானது தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளை வலியுறுத்துகிறது. இம்முயற்சிகள் செயல்திறன் உயர்வு, விரைவான சேவை நிறைவு காலம் மற்றும் மேலும் தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்க உதவியுள்ளன.
இந்த சாதனைதொடர்பாக பொதுக் காப்புறுதி பிரதம செயற்பாட்டு அதிகாரி சிவா கார்த்திகன் தெரிவிக்கையில் :
“எங்கள் முகாமைத்துவ நடைமுறைகளின் வலிமையையும், எங்கள் மருத்துவ உரிமைக்கோரல்கள் குழு தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பையும் இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது என்பதில் நாம் உற்சாகமடைந்துள்ளோம். உயர்ந்த தரநிலைகளைப் பேணுதல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நம்பகமான, வெளிப்படையான உரிமை கோரல் அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பே இந்த முக்கியமான மைல்கல்லை அடைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.”
CPM BMPC விருதுகள், முகாமைத்துவ நடைமுறைகளில் சிறப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. இந்த அங்கீகாரம், உயர்ந்த செயல்பாட்டு தரநிலைகளை பேணுவதிலும் தனது சேவை வழங்கலை தொடர்ந்து மேம்படுத்துவதிலும் அமானா தகாஃபுல் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
