Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்த பிரபல வீரர்!

May 26, 2026 - 05:18 PM -

0

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்த பிரபல வீரர்!
Mobitel inner

தமிழக வீரரான சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஷ்வின் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, முருகன் அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான செய்தியில் கூறியதாவது, 

எனக்கு 6 வயது இருக்கும்போது நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அன்று முதல் இந்த விளையாட்டை ஆழமாகக் காதலித்து வருகிறேன். 

இன்று நான் இந்த நிலைக்கு இருப்பதற்கு காரணமே கிரிக்கெட்தான். இதுவரை எனது பயணம் அற்புதம் வாய்ந்தது. அதை கருத்தில் கொண்டு உங்கள் அனைவருடனும் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நான் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் பயணத்தில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். எவ்வாறாயினும், நான் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவேன். எப்போதும்போல அதே உத்வேகத்துடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் , டெல்லி டேர்டெவில்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 6 அணிகளில் இவர் விளையாடி உள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara