Header Logo

விளையாட்டு
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்த பிரபல வீரர்!

May 26, 2026 - 05:18 PM -

0

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்த பிரபல வீரர்!

தமிழக வீரரான சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஷ்வின் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, முருகன் அஷ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான செய்தியில் கூறியதாவது, 

எனக்கு 6 வயது இருக்கும்போது நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அன்று முதல் இந்த விளையாட்டை ஆழமாகக் காதலித்து வருகிறேன். 

இன்று நான் இந்த நிலைக்கு இருப்பதற்கு காரணமே கிரிக்கெட்தான். இதுவரை எனது பயணம் அற்புதம் வாய்ந்தது. அதை கருத்தில் கொண்டு உங்கள் அனைவருடனும் ஒரு முக்கிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நான் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் பயணத்தில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். எவ்வாறாயினும், நான் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவேன். எப்போதும்போல அதே உத்வேகத்துடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் , டெல்லி டேர்டெவில்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 6 அணிகளில் இவர் விளையாடி உள்ளார்.


MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title