May 29, 2026 - 11:05 AM -
0
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு மத்தியில் 9 வது இடத்தை பெற்று, சூப்பர் - 4 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வௌியேறியுள்ளது.
அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பதிலாக ஜஸ்பிரிட் பும்ராவை நியமிப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
எனினும் இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வ தகவல்களும் வௌியாகவில்லை.
ஐ.பி.எல் வரலாற்றில் முன்னாள் தலைவர் ரோஹித் சர்மா தலைமையில் 5 தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை கிண்ணத்தை வெற்றிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

