Header Logo

விளையாட்டு
குஜராத் டைடன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து!

Jun 1, 2026 - 09:56 AM -

0

குஜராத் டைடன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து!

குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (31) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. 156 என்ற வெற்றி இலக்கை ​நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு இலக்கை எளிதில் எட்டி கிண்ணத்தை கைப்பற்றியது. 

வெற்றியாளரான ஆர்சிபிக்கு 20 கோடி ரூபாவும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு, குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. 

ஊழியர்கள் உடனடியாக அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாகக் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீதியில் தவித்தனர். இருப்பினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title