Header Logo
Mogo Academy

விளையாட்டு
சகோதரர்களுக்குள் நீடிக்கும் மோதல்?

Jun 1, 2026 - 04:11 PM -

0

சகோதரர்களுக்குள் நீடிக்கும் மோதல்?
Mobitel inner

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ipl) 19 ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று நேற்று (01) உடன் முடிவடைந்தது. 

தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே சாம்பியன் பட்டம் வென்றது. 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆர்சிபி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்த வெற்றி ரசிகர்களின் மனங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தனது முதல் ஐபிஎல் கிண்ணத்தை வெல்லப் போராடிக்கொண்டிருந்த ஒரு அணி, இந்தத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு பட்டங்களை வென்றது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சீசன் முழுவதும் ஆர்சிபி அணிக்கு ரஜத் படிதாரின் தலைமைத்துவம் மிகப்பெரிய பங்கை வகித்தது. 

இருப்பினும், சிறப்பான ஆல்-ரவுண்ட் ஆட்டத்திற்காக அறியப்பட்ட நட்சத்திர வீரர் க்ருணால் பாண்டியா, ஐபிஎல் கிண்ணத்தை இரண்டாவது முறையாக வெல்வதில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார். 

ஐபிஎல் 2025 இல் ஆர்சிபி அவரை அணியில் சேர்த்தது. அவரது வருகை, அந்தத் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு கிண்ணங்களை வெல்ல அவர்களுக்கு உதவியுள்ளது. 

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரும், க்ருணால் பாண்டியாவின் சகோதரருமான ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீழ்த்தி கிண்ணத்தை வென்ற பிறகு, இந்த மாபெரும் மைல்கல்லை எட்டியதற்காகத் தன் சகோதரருக்கு வாழ்த்துத் தெரிவித்தோ அல்லது அவரைப் பாராட்டியோ ஹர்திக் பாண்டியா தனது சமூக ஊடகத்தில் எதையும் பதிவிடவில்லை. 

சமீபத்தில், இரு சகோதரர்களுக்கும் இடையே பிரச்னைகள் இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கிடையில், இந்த வதந்திகள் குறித்து க்ருணால் பாண்டியா மனம் திறந்து, “கேனும், அண்டர்டேக்கரும் கூட சில சமயங்களில் சண்டையிடுவார்கள்” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

ஆனால், ஹர்திக் பாண்டியா வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara