Jun 3, 2026 - 11:02 AM -
0
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையில் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நேற்று (3)இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவர் நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
அந்த சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்பின்னர் பொலிஸார் மீண்டும் தீவர சோதனையில் ஈடுபட்ட நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சூட்சுமமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரும் கைதானார்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
--

