Jun 5, 2026 - 08:52 AM -
0
இந்திய ஆந்திராவைச் சேர்ந்த 32 வயதான கே.எஸ்.பரத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (4) அறிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு அறிமுகமான விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரரான கே.எஸ். பரத் இதுவரை 7 டெஸ்டில் விளையாடி 221 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதில் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆடியதும் அடங்கும். 2024-ம் ஆண்டு பெப்ரவரிக்கு பிறகு அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், இந்திய அணிக்காக ஆடியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஆதரவாக இருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை , பயிற்சியாளர்கள், சக வீரர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

