Header Logo
Mogo Academy

விளையாட்டு
தோனி, கோலியை முந்திய 3 வீரர்கள்!

Jun 5, 2026 - 10:19 AM -

0

தோனி, கோலியை முந்திய 3 வீரர்கள்!
Mobitel inner

இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய அணி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தற்போதைய அணி தலைவரான சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ள சூழலில், கேப்டன்சி மாற்றம் குறித்த தகவல்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன. 

இந்த நிலையில், குறைந்தபட்சம் 10 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய அணி தலைவர்களில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட முதல் 3 வீரர்களை பார்க்கலாம். 

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முழுநேர அணி தலைவராக இல்லாவிட்டாலும், பல்வேறு தொடர்களில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். கேப்டனாக 16 போட்டிகள் விளையாடிய இவர் அதில் 10 வெற்றிகள் 5 தோல்விகளுடன் 62.5 வெற்றி சதவீதம் கொண்டுள்ளார். 

ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பிறகு டி20 அணியின் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவ், தனது தலைமையில் பல முக்கிய வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அணி தலைவராக 52 போட்டிகளில் 40 வெற்றிகள் 8 தோல்விகள் கண்டு 76.92 வெற்றி சதவீதம் கொண்டுள்ளார். 

ரோகித் சர்மா இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணி தலைவராக முதலிடத்தில் உள்ளார். அணி தலைவராக 62 போட்டிகள் விளையாடி 49 வெற்றிகள் பெற்று 79.03 வெற்றி சதவீதம் வைத்துள்ளார். 

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான அணி தலைவராக தெரிவிக்கப்படும் தோனி, கோலிக்கு இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறவில்லை. 

எம்.எஸ். தோனி 72 போட்டிகள் விளையாடி 56.94 வெற்றி சதவீதம் வைத்துள்ளார். விராட் கோலி 50 போட்டிகள் விளையாடி 60 வெற்றி சதவீதம் வைத்துள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara