Jun 5, 2026 - 12:18 PM -
0
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகித்தார். அவர் 16 போட்டிகளில் 1 சதம், 5 அரை சதத்துடன் 675 ஓட்டங்களை எடுத்தார்.
காயம் காரணமாக அவர் போட்டியை தவறவிடுவது மிகவும் அரிதானது. ஏற்கனவே, ரோகித் சர்மா உடல் தகுதியுடன் இல்லை. முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே அவர் ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடுவார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13 ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகிறது.

