Jun 8, 2026 - 06:46 PM -
0
திரை உலகில் சம்பள விஷயத்தில் நடிகைகளிடையே முதலிடத்தை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. நடிகைகளின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
சம்பள விஷயத்தில் நீண்ட காலமாக நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்தார். அவர் ஒரு படத்திற்கு 9 கோடி ரூபா முதல் 12 கோடி ரூபா வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. 2026 ஆம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனா, நயன்தாராவை முந்தியுள்ளார். அவர் நடித்துள்ள ‘காக்டெயில்-2’ படத்திற்காக ராஷ்மிகா மந்தனா 15 கோடி ரூபா சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா-2, சாவா படங்கள் திரைக்கு வந்து அதிக வசூலை பெற்றுள்ளன. புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா 2 கோடி ரூபா சம்பளம் வாங்கினார். சில ஆண்டுகளில் அவரது திரை வாழ்க்கையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டு தற்போது 15 கோடி ரூபா சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

