Header Logo
Mogo Academy

விளையாட்டு
மீண்டும் இந்திய அணிக்குள் பிரபல வீரர்!

Jun 9, 2026 - 04:02 PM -

0

மீண்டும் இந்திய அணிக்குள் பிரபல வீரர்!
Mobitel inner

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஒருநாள் போட்டிகள் வருகிற 13, 17, 20 ஆம் திகதிகளில் முறையே தர்மசாலா, லக்னோ, சென்னையில் நடக்கின்றன. 

இந்த நிலையில் ஒருநாள் போட்டி அணியில் இடம் பிடித்திருந்த முன்னாள் அணி தலைவர் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகி இருக்கிறார். இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் காயம் காரணமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியது. 

ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர்களின் பங்கேற்பு முழுமையாக உடல்தகுதியைப் பொறுத்தே இருக்கும் என்று பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியிருந்தார். 

இந்த இரு வீரர்களும் அணியுடன் இணையும் முன், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்புத் திறன் மையத்தில் (CoE) நடைபெறும் உடல்தகுதிப் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இதுவரை ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள மையத்திற்கு வரவில்லை. இதனால் அவர் ஆப்கானிஸ்தான் தொடரை முழுமையாகத் தவறவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட்டது. 

இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் உடல்தகுதிப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara