Header Logo
Mogo Academy

சினிமா
பாரதிராஜா குழந்தை மாதிரி - ரஜினி

Jun 10, 2026 - 04:27 PM -

0

பாரதிராஜா குழந்தை மாதிரி - ரஜினி
Mobitel inner

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தமது 84 வது வயதில் காலமானார். 

அன்னாரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பாரதிராஜா "16 வயதினேலே" படத்தின் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 

முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருபெரும் நடிகர்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுத்து ஆச்சரியப்பட வைத்தார். 

அதன்பிறகு கமலை வைத்து "சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி" படங்களும், ரஜினியை வைத்து "கொடி பறக்குது" படமும் இயக்கினார். 

மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, 

அவரின் திறமை சாதனை பற்றி எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையில் நிறைய தொழில் நுட்பங்களை கொண்டு வந்து நிறைய அறிமுகப்படுத்தியவர் திரையுலகை வாழ வைத்தவர். 

இயக்குனர் தயாரிப்பாளர் என யாருக்கு பிரச்னை வந்தாலும் முதலில் குரல் கொடுத்து போராடியவர். 

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் பெயரை மறக்க மாட்டார்கள் என்றென்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கும். 

தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. பிடித்தால் பிடித்திருக்கிறது இல்லை என்றால் இல்லை என்று மனதில் இருப்பதை சொல்பவர். 

உன்னை எனக்குப் பிடிக்கும் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று என்னை பற்றி விமர்சனம் செய்வார். 

அவரிடம் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப் போன்று வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 

எம்ஜிஆர், கருணாநிதி, சிவாஜி என எல்லோருக்கும் நட்புடன் இருந்தவர் அன்போடு இருந்தவர். 

அவர் குணமாகி விடுவார் என்று தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள். அவர் என்றென்றும் நினைவில் உடன் இருப்பார். 

அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara