Header Logo

வணிகம்
மூலதனச் சந்தைத் துறையில் நிலைத்தன்மை முன்னெடுப்புகளில் First Capital முன்னணி வகிக்கின்றது

Jun 11, 2026 - 03:18 PM -

0

மூலதனச் சந்தைத் துறையில் நிலைத்தன்மை முன்னெடுப்புகளில் First Capital முன்னணி வகிக்கின்றது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதுமான First Capital Holdings PLC, 2025/26 நிதியாண்டில் பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைத்தன்மை சார்ந்த இணைப்புகளைப் (affiliations) பெற்றுள்ளது. இது பொறுப்பான நிதி, காலநிலை பொறுப்புக்கூறல், நிதி உள்ளீர்ப்பு மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மீதான அதன் ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. 

இக் காலகட்டத்தில் அதன் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஐரோப்பிய நிலைத்தன்மை மேம்பாட்டு அமைப்பின் (European Organisation for Sustainable Development) Sustainability Standards & Certification Initiative (SSCI) வழங்கும் Certificate of Acceptance சான்றிதழைப் பெற்ற உலகின் முதல் முதலீட்டு நிறுவனம் என்ற பெருமையை First Capital பெற்றமை அமைகிறது. மேலும், United Nations Global Compact (UNGC), UN Women’s Empowerment Principles (WEP), மற்றும் Partnership for Carbon Accounting Financials (PCAF) ஆகியவற்றில் இணைந்த இலங்கையின் முதல் முதலீட்டு நிறுவனமாகவும் First Capital திகழ்கிறது. இதன் மூலம் நெறிமுறையான ஆளுகை, பாலின உள்ளீர்ப்பு, காலநிலை வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்த நிதி நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளை, First Capital Asset Management Limited, UN Principles for Responsible Investment (UN PRI) அமைப்பில் இணைந்த இலங்கையின் முதல் நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. 

நிறுவனத்தின் விரிவான நிலைத்தன்மை நோக்கைப் பற்றிக் கருத்து வெளியிட்ட First Capital Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டில்ஷான் வீரசேகர, பொறுப்பான முதலீடுகள், வலுவான ஆளுகை நடைமுறைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்குவதில் எமது பொறுப்பை நாங்கள் உணர்கிறோம். இன்றைய சூழலில் நிலைத்தன்மை என்பது வணிகத் திட்டத்தின் ஒரு துணைப்பகுதி அல்ல, அது நீண்டகால வலிமைக்கும் மதிப்பு உருவாக்கத்திற்கும் அடித்தளமாக மாறியுள்ளது. மூலதனச் சந்தைத் துறையில் நிலைத்த நிதி நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் First Capital முன்னணி பங்காற்றி வருகிறது. 2025/26 நிதியாண்டில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம், பங்குதாரர்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் எமது தொடர்ச்சியான முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். என்றார். 

ஆண்டு முழுவதுமான நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைந்தது. First Capital, அதன் டீல் பிளேஸ் கட்டிடக் கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவி, WNPS PLANT முன்முயற்சியுடன் இணைந்த வனப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியது. மேலும், பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுப்பதும் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதும் தொடர்பான சுற்றுச்சூழல் தலைமைத்துவ நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. காலநிலை தொடர்பான அறிக்கையிடல் தயார்நிலை மற்றும் வெளிப்படுத்தல் ஒழுங்குமுறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் சிரேஷ்ட நிர்வாகத்தினருக்கும் SLFRS S1 மற்றும் S2 தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் நிலைத்தன்மை முன்னேற்றங்களைப் பற்றிக் கருத்து தெரிவித்த First Capital Holdings PLC இன் நிலைத்தன்மை மற்றும் நிறுவன அறிக்கையிடல் பிரிவின் தலைவர் டிலுனி தனுஷிகா, First Capital இல் நிலைத்தன்மை என்பது நீண்டகால மதிப்பு உருவாக்கத்தின் மையக் கூறாக உள்ளது. 2025/26 நிதியாண்டின் போது ஆளுமை கட்டமைப்புகளை வலுப்படுத்தல், காலநிலைப் பொறுப்புணர்வை மேம்படுத்தல், நிதி உள்ளீர்ப்பை விரிவுபடுத்தல் மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலைத்தன்மை தரநிலைகளுடன் இணங்கச் செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் எமது உறுதிப்பாடுகளை அளவிடக்கூடிய செயற்பாடுகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தினோம். எதிர்காலத் தேவைகளுக்குத் தயாரான, வெளிப்படைத்தன்மை கொண்ட, வலுவான நிறுவனத்தை உருவாக்குவதே எமது நீண்டகால நோக்கமாகும் என்றார். 

நிதி அறிவாற்றலையும் முதலீட்டாளர் வலுவூட்டலையும் மேம்படுத்துவது நிறுவனத்தின் நிலைத்தன்மை செயற்திட்டத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. நிறுவனத்தின் investED பல்கலைக்கழக விழிப்புணர்வு நிகழ்ச்சி, பன்மொழி முதலீட்டாளர் கலந்துரையாடல்கள், Stock Talk இணையவழி தொடர்கள் மற்றும் நாடளாவிய விழிப்புணர்வு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் பொறுப்பான முதலீட்டு அறிவை விரிவாகக் கொண்டு செல்லும் பணியை நிறுவனம் முன்னெடுத்தது. investED திட்டத்தின் வாயிலாக மட்டும் 1,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பயனடைந்தனர். மேலும், FinPowerHer திட்டத்தின் மூலம் பெண்களை ஊக்கப்படுத்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பின்தங்கிய சமூக மேம்பாடு, தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மற்றும் இளைஞர் முன்னேற்றம் உள்ளிட்ட பல துறைகளில் நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பை மேலும் விரிவாக்கியது. இதில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கடலாமை பாதுகாப்புத் திட்டங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் மாணவர் நல மேம்பாட்டு முயற்சிகள், Hatch நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட First Capital Startup Nation திட்டம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டாண்மைகள், கல்வி சார்ந்த சமூக அணுகல் நிகழ்ச்சிகள் மற்றும் Rebuild Sri Lanka Fundக்கு ரூ.15 மில்லியன் நிதியுதவி வழங்கியமை என்பன உள்ளடங்கும். 

நிறுவனத்தின் உள்ளும், ஊழியர் விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டு நடவடிக்கைகள் மூலம் நிலைத்தன்மை சார்ந்த நிறுவனக் கலாச்சாரத்தை வலுப்படுத்தியதுடன், பொறுப்புணர்வு, கண்காணிப்பு மற்றும் நீண்டகால தாங்குதிறனை மேம்படுத்தும் ஆளுமை கட்டமைப்புகளும் பலப்படுத்தப்பட்டன. எதிர்காலத்தில், PCAF வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நிதியளிக்கப்பட்ட உமிழ்வு அடிப்படை மதிப்பீடுகளை நடைமுறைப்படுத்தல், SLFRS S1 மற்றும் S2 தகவல் வெளியீட்டு தயார்நிலையை மேலும் மேம்படுத்தல் மற்றும் SSCI உயர்தாக்க இலக்குகளை முன்னெடுத்துச் செல்லல் ஆகியவற்றில் First Capital கவனம் செலுத்தவுள்ளது. 

First Capital Holdings PLC பற்றி 

இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துத்தை கொண்டுள்ள First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட்டால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் A இலிருந்து A+ ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

title