Header Logo

செய்திகள்
எல் நினோ காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய கணிப்பு

Jun 14, 2026 - 01:13 PM -

0

எல் நினோ காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய கணிப்பு

 

இலங்கையைப் பாதித்துள்ள 'எல் நினோ' காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும், அதனுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.


தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்படும் இந்த 'எல் நினோ' நிலைமை, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களாகும் போது மிகவும் வலுவான நிலையை அடைவதற்குக் கிட்டத்தட்ட 60%-க்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சர்வதேச நோவா மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலைமையின் தாக்கம் காரணமாக, இதன் விளைவாக ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி குறையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.


குறிப்பாக ஓகஸ்ட் மாதத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும், தற்போதைய அறிகுறிகளின்படி செப்டம்பர் மாதத்திலும் மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் அஜித் விஜேமான்ன கூறினார்.


இருப்பினும், வரும் காலத்தில் பசிபிக் பெருங்கடலில் Typhoon போன்ற சூறாவளிகள் உருவானால் இந்நிலைமை மாறி, தென்மேற்கு பருவக்காற்று சற்றே சுறுசுறுப்படைவதன் மூலம் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title