Header Logo

மலையகம்
காணாமல் போன குடும்பஸ்தர் ஆற்றில் சடலமாக மீட்பு!

Jun 15, 2026 - 02:29 PM -

0

காணாமல் போன குடும்பஸ்தர் ஆற்றில் சடலமாக மீட்பு!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆட்லோ தோட்டப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து 74 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குடும்பத்தினரின் தகவலின்படி, குறித்த முதியவர் கடந்த 14 ஆம் திகதி மாலை சுமார் 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது, அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அக்கரப்பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title