Jun 15, 2026 - 05:26 PM -
0
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டு நாடுகளும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (14) இரவு முதல் இன்று (15) காலை ரஷ்யா ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் பல்வேறு இடங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 53 பேர் காயம் அடைந்துள்ளனர். வழிபாட்டு தலம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர நேற்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் தனித்தனியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினர். அன்றைய தினம் இரவே ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் போரை தொடருவற்கான நோக்கத்தை உலக நாடுகளுக்கு ரஷியா காட்டுகிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

