Header Logo

செய்திகள்
ஹேமசிறி, பூஜித்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி நிர்ணயம்

Jun 15, 2026 - 05:40 PM -

0

ஹேமசிறி, பூஜித்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி நிர்ணயம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாகத் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தினர் உத்தரவிட்டுள்ளனர். 

இந்த வழக்கு இன்று (15) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகள் அடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அத்துகோரல தனது வாய்மூல சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார். 

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் ஆயத்தினர், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிப்பதாக அறிவித்தனர். 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாகக் குற்றவியல் ரீதியாகக் கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையும் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. 

இதற்கமைய, பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பும் ஜூலை மாதம் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற மூவர் அடங்கிய நீதியபதிகள் ஆயத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title