Header Logo

செய்திகள்
கண்டியில் சுரங்கப் பாதைகளை தவிர்ப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Jun 15, 2026 - 08:21 PM -

0

கண்டியில் சுரங்கப் பாதைகளை தவிர்ப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல், முறைசாரா முறையில் பிரதான வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குக் கண்டி பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல், ஆபத்தான முறையில் வீதிகளைக் கடப்பது தற்போது பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நகரத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காகப் பெருமளவிலான செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் இருக்கும் நிலையிலும், சிலர் அவற்றை தவிர்ப்பதன் காரணமாக வீதி விபத்துக்களின் அபாயமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இது தொடர்பாகக் கண்டி பொலிஸார் குறிப்பிடுகையில், சட்டவிரோதமான முறையில் வீதிகளைக் கடக்கும் நபர்களுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். 

இதற்கமைய, பாதசாரி கடவைகள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் குழுக்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் கண்டி பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title