Header Logo

செய்திகள்
19 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு குறித்த அறிவிப்பு

Jun 15, 2026 - 10:33 PM -

0

19 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு குறித்த அறிவிப்பு

அத்தனகல்ல, கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (16) முதல் பல பகுதிகளில் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

இதற்கமைய, நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் அதாவது புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும். 

மினுவாங்கொடை வலயம்: மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். 

கம்பஹா வலயம்: கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். 

மஹர வலயம்: மஹர பிரதேச சபைக்குட்பட்ட மாஹரகம, சிவுரலுமுல்ல, கிரிகித்த, கினிகம, எட்டிகெஹெல்கல்ல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். 

அத்தனகல்ல வலயம்: ரன்பொகுணகம வீட்டுத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வதுபிட்டிவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். 

நிட்டம்புவ வலயம்: நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள். 

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

எனவே, குறிப்பிட்ட காலப்பகுதிக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. 

இது தொடர்பான மேலதிக விபரங்களை 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title