Header Logo

இந்தியா
த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்!

Jun 18, 2026 - 06:30 AM -

0

த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் தமிழ் நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று (18) காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். 

வாக்கெடுப்புக்கு பின்னர் பெரும்பான்மை உறுதியானதை தொடர்ந்து சட்டசபை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழக கவர்னர் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக கவர்னர் அர்லேகர் இன்று காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வருகிறார். அவரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்கின்றனர். 

சட்டசபை கூட்ட அரங்குக்கு கவர்னர் அர்லேகர் வந்ததும் 10 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்கும். அப்போது அரசின் சார்பில் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள உரையை கவர்னர் அர்லேகர் வாசிப்பார். ஆங்கிலத்தில் இடம் பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது. 

அதன் பிறகு கவர்னரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசிப்பார். அத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன் பிறகு அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

title