Header Logo

செய்திகள்
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வரும் விளக்கமறியலில்

Jun 21, 2026 - 07:35 AM -

0

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வரும் விளக்கமறியலில்

தெரணியாகல பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

தெரணியாகல பகுதியில் போதைப்பொருள் சோதனைக்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 19ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

 

அங்கு சட்டவிரோதமாகக் கூடி, தாக்குதல் நடத்தி நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குக் காயம் ஏற்படுத்தியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சந்தேகநபர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இச்சம்பவம் குறித்து தெரணியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!