Jun 21, 2026 - 05:37 PM -
0
வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று (21) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 மணியளவிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வௌியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

