Header Logo

செய்திகள்
சந்தேகத்திற்கிடமான நபர் தொடர்பில் சலேவின் மனைவி முறைப்பாடு

Jun 21, 2026 - 09:06 PM -

0

சந்தேகத்திற்கிடமான நபர் தொடர்பில் சலேவின் மனைவி முறைப்பாடு

சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடைய, சிவில் உடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்காணிப்பில் ஈடுபடும் நபர் ஒருவர், தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் மீண்டும் மீண்டும் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய, நேற்று (20) தனது 17 வயதுடைய மகளும் 22 வயதுடைய மகனும் தங்களது தந்தையின் நலம் விசாரிப்பதற்காக தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது, அந்த நபர் தமது பிள்ளைகளைப் பின்தொடர்ந்து சென்று தனது கைத்தொலைபேசி மூலம் அவர்களின் புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ எடுத்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் இதற்கு முன்னரும் தேசிய வைத்தியசாலைக்கு அருகிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்கு அருகிலும் அவர் நடமாடியதை அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதை அடையாளம் காணுமாறும், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துமாறும் மனோரி சலே, குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையிடம் கோரியுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title