Jun 22, 2026 - 08:39 AM -
0
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரைச் சேர்ந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா தலைமையிலான 150 பேர் கொண்ட யாத்திரிகள் குழுவினர், நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வருகை தந்த யாத்திரிகர்கள் ஆலயத்தில் விசேட பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலய வளாகத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தையும் பக்தி பூர்வமாக மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ஆலயத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், வருகை தந்த யாத்திரிகர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

