Header Logo

பல்சுவை
தலை அரிப்பு தாங்க முடியலையா?

Jun 24, 2026 - 06:29 PM -

0

தலை அரிப்பு தாங்க முடியலையா?

லெமனும் தயிரும், 

நம்ம வீட்ல எப்பவும் தயிர் இருக்கும்ல? ஒரு சின்ன கப்புல புளிச்ச தயிர் எடுத்துக்கோங்க. அதுல அரை மூடி எலுமிச்சம்பழ சாறை பிழிஞ்சு நல்லா கலந்துக்கோங்க. 

இதை அப்படியே தலையோட வேர்க்கால்களில் படுவது போன்று நல்லா தேய்ச்சு விடுங்க. ஒரு 20 நிமிஷம் அப்படியே ஊற விட்டுட்டு, அப்புறமா மைல்டான ஷாம்பு போட்டு குளிச்சிருங்க. தயிர் தலையை சாஃப்ட் ஆக்கும், லெமன் பொடுகை காலி பண்ணும்! 

வேப்பிலை அண்ட் எலுமிச்சை, 

தலை பயங்கரமா அரிக்குது, சின்ன சின்னதா கொப்பளம் வருதுன்னா இதுதான் பெஸ்ட் சாய்ஸ். ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து நல்லா அரைச்சுக்கோங்க. 

அதுல கொஞ்சம் லெமன் ஜூஸ் ஊத்தி மிக்ஸ் பண்ணி தலையில பேக் மாதிரி போடுங்க. ஒரு 15 நிமிஷம் கழிச்சு வாஷ் பண்ணிடுங்க. 

வேப்பிலையில இருக்கிற ஆன்டி-பாக்டீரிபா குணம் பொடுகை வரவழைக்கிற ஃபங்கஸை அப்படியே அழிச்சிரும். 

சின்ன வெங்காய சாறு, 

பொடுகு வந்தாலே கூடவே முடி கொட்டுற பிரச்சினையும் ஃப்ரீயா வந்துரும். அதுக்கு சூப்பர் ஐடியா - சின்ன வெங்காயம். 

ஒரு 10 சின்ன வெங்காயத்தை எடுத்து நல்லா அரைச்சு சாறு மட்டும் பிழிஞ்சு எடுத்துக்கோங்க. 

ஒரு பஞ்சு வச்சு அந்த சாறை தலையில் நல்லா தேய்ங்க. ஒரு 15 நிமிஷத்துல குளிச்சிருங்க. 

வெங்காயத்துல இருக்கிற சல்பர் பொடுகை நீக்குறது மட்டும் இல்லாம, புது முடியையும் வளர வைக்கும். 

போனஸ் டிப்ஸ், 

சீப்பை மாத்துங்க: உங்க சீப்பை மத்தவங்களுக்கு தராதீங்க. வாரம் ஒருக்கா உங்க சீப்பை சுடுதண்ணியில் போட்டு நல்லா கழுவுங்க. 

ஈரத்தலை வேண்டாம்: குளிச்சதுக்கு அப்புறம் தலையை ஒழுங்கா காய வைக்காம அப்படியே பின்ன வேண்டாம். ஈரம் இருந்தா பொடுகு இன்னும் அதிகமாகும். 

தலையணை உறை: வாரம் ரெண்டு தடவையாவது உங்க பில்லோ கவரை மாத்திருங்க. ஏன்னா அதுல இருக்குற பொடுகு கிருமிகள் திரும்ப உங்க தலையிலயே ஒட்டிக்கும். முகத்துக்கும் இது பாதிப்புதான். 

தேங்காய் எண்ணெய் + கற்பூரம்: சாதாரணமா தலைக்கு எண்ணெய் வைக்கும் போது, தேங்காய் எண்ணெயை லேசா சூடு பண்ணி அதுல ஒரே ஒரு சிட்டிகை கற்பூரத்தை நசுக்கிப் போட்டு தலையில தேய்ச்சிட்டு வந்தா பொடுகு வராது.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!