Header Logo
Mogo Academy

பல்சுவை
ரூபா 100 பணத்திற்காக கணவரையே தீ வைத்த மனைவி!

Jul 6, 2026 - 04:37 PM -

0

ரூபா 100 பணத்திற்காக கணவரையே தீ வைத்த மனைவி!
Mobitel inner

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (வயது 45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. 

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (வயது 45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. 

அவதேஷ் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தநிலையில், நேற்று (05) இரவு 100 ரூபாய் பணம் தொடர்பாக கணவன் - மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் மனைவியை அவமானப்படுத்தியதாக தெரிகிறது. 

இதனால் கோபத்தில் இருந்த பிரித்தி தேவி, கணவர் கட்டிலில் தூங்கி கொண்டிருக்கும் போது அவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார். 

நள்ளிரவில் திடீரென வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தனர். பொலிஸார் வருவதற்குள் அவதேஷ் உடல் தீ பற்றி எரிந்து கரிக்கட்டையானது. பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

முதலில் தற்கொலை என நாடகமாடப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெட்ரோல் பாட்டில் ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் மனைவி பிரித்தி தேவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இதனை தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரூபா 100 பணத்திற்காக கணவரையே மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara