Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Jul 13, 2026 - 10:23 AM -

0

ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
Mobitel inner

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், கடந்த 11 ஆம் திகதி ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,071 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (12) தினம் அந்த எண்ணிக்கை 601 இனால் அதிகரித்துள்ளது. 

இதில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36,118 ஆகப் பதிவாகியுள்ளது. 

அத்துடன், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 14,112 ஆகக் காணப்படுகிறது. 

அதேபோன்று, கொழும்பு மாவட்டத்தில் 13,791 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் 13,293 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,538 ஆகும். 

டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டு மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


MOST READ

காணொளி
இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

Mobitel Upahara