Jul 13, 2026 - 02:41 PM -
0
சுதந்திரத்திற்கு பின்னர் இந்நாட்டில் உருவான முதல் மற்றும் மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம் இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரமாகும். அக்காலப் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் சிந்தனையின் கீழ் கிழக்குப் பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு படியாக அமைந்த திட்டமானது, விவசாயத்தை உயர்த்தி நிறுத்தும் முதன்மையான திட்டமுமாகும்.
அதன் ஒரு படியாக 1960 ஆம் ஆண்டில் அரசு முயற்சியாக கல்-ஓயா சீனி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு வரையில் இப்பிரதேசத்தின் முன்னேற்றத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றிய இந்தத் திட்டம், இந்நாட்டுப் பொருளாதாரத்திலும் சிறப்புக்கூறாக விளங்கியது. 1996 ஆம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட சீனி தொழிற்சாலைல, 2006 ஆம் ஆண்டில் கிழக்கு எழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அரசு - தனியார் கூட்டு முயற்சியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது, திகாமடுல்ல மக்களின் மனதில் புதிய நம்பிக்கையை விதைத்தவாறு. அதன்படி, அதன் 51% உரிமை அரசுக்கும், 49% உரிமை பிரவுன்ஸ் மற்றும் LOLC நிறுவனங்களுக்கும் சொந்தமானது.
பாழடைந்து கிடந்த சீனி தொழிற்சாலையை புதிய முழுமையான புனரமைப்பிற்குப் பின்னர் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புத்தாக்கமான தொழில்நுட்பத்தை தொழிற்சாலைக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுத்தது. அவ்வாறு தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் தொழிற்சாலை வசதிகளை மேம்படுத்திய அவர்கள், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் நூற்றுக்கணக்கானவற்றை உருவாக்கி, பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்தனர். அவ்வாறு கிழக்கின் அபிவிருத்தியிலும், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பயணத்தையும் ஆரம்பித்த கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம், இன்று கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய தொழில் திட்டத்தை மேற்கொள்ளும் சேவையில் மாபெரும் பங்காற்றுகிறது.
உள்ளூர் பொருளாதாரத்திற்கான வலுவான பங்களிப்பு
சுமார் இரண்டாயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ள கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம், கரும்பு பயிரிடும் 1500 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதில் முதன்மைப் பங்காற்றுகிறது. தொடர்ந்து நியாயமான விலையில் அவர்களின் கரும்பு அறுவடையை வாங்குவதன் மூலம் இதனைச் செய்கிறது. அதன்படி, 1,225 க்கும் மேற்பட்ட நேரடி ஊழியர்களுக்கும், 6000 க்கும் மேற்பட்ட மறைமுக ஊழியர்களுக்கும் உதவியாக இருக்கும் கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம், 2007 ஆம் ஆண்டு முதல் தனது ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இதுவரை வழங்கப்பட்ட தொகை 9,235 மில்லியன் ரூபாவாகும்.
கரும்பு அறுவடையை வாங்குவது மட்டுமின்றி, கரும்பு பயிரிடலுக்குத் தேவையான கரும்பு விதைகள், உரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்பிரதேசத்தின் பொருளாதார வலிமையை உயர்த்துவதுடன், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பதற்கும், அரசு வரி வருவாயை அதிகரிப்பதற்கும் இந்த ஆலை முன்னுரிமை எடுத்துச் செயல்படுகிறது. உள்நாட்டு நிறுவனமாக, நாட்டிற்குத் தேவையான சர்க்கரையை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்து, சர்க்கரை இறக்குமதிக்கு ஆகும் செலவினத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ள இந்நிறுவனம், உடல் நலத்திற்கு உகந்த தூய சர்க்கரை உற்பத்தியை இந்நாட்டு நுகர்வோருக்கு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், இப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளிடமிருந்து அறுவடையை வாங்கி, அந்த விவசாயிகளுக்கு 23,462 மில்லியன் ரூபா தொகையை வழங்குவதற்கு கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது 10,000 விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக அமைந்துள்ளது. மேலும், அறுவடைக்கான கொடுப்பனவுகள், கரும்பு அறுவடை போக்குவரத்து, பயிரிடல் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றிற்காக 14,207 மில்லியன் ரூபா தொகையை நிறுவனம் செலுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
நவீன தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் துணை உற்பத்திகள்
நவீனதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்க்கரை உற்பத்தி மேற்கொள்ளப்படும் இந்த ஆலையின் செயற்பாட்டில் இருந்து உருவாகும் மின்சாரத்தைப் பயன்படுத்தி மொத்தப் பிரதேசத்திற்கும் மின் சக்தியை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறது. இதற்கு மேலதிகமாக, சர்க்கரை உற்பத்தி செயல்பாட்டில் துணை விளைபொருளான மொலாசஸ், உயர்தர எத்தனோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தியின் துணை விளைபொருளையும் பொருளாதாரக் காரணிகளாக மாற்றுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், உற்பத்தியின் போது வெளியிடப்படும் கார்பனீரொக்சைடு சூழலுக்கு வெளியேற அனுமதிக்காமல் சேமித்து வைத்து, அவற்றை மீண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய கார்பனேற்றப்பட்ட பானங்கள் உற்பத்தி போன்ற தொழில்களுக்கு பயன்படுத்துவதற்கு கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலைலயில் இருந்து கழிவாக வெளியேற்றப்படும் பொருட்கள் கூட வீணாவதற்கு அனுமதியாமல், அவற்றிலிருந்து உயர்தர கரிம உரத்தை உற்பத்தி செய்து மலிவு விலையில் விவசாய மக்களுக்கு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் இங்கு மற்றுமொரு சிறப்பம்சமாகும். 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25,358 மெட்ரிக் தொன் உரத்தை உற்பத்தி செய்து, சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கு கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம் பங்களிப்புச் செய்துள்ளது. மேலும், உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர் வீணாவதற்கு அனுமதியாமல், மீண்டும் மீண்டும் தொழிற்சாலை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதன் மூலம், கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம் சுற்றுச்சூழல் ரீதியாகக் காட்டும் பொறுப்புமிக்க பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும்.
பசுமைத் தொழில் கருத்தினூடாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை மதித்து, உயர் தொழில் தரநிலைகளின்படி அனைத்து உற்பத்திகளையும் மேற்கொள்வதற்கு இடைவிடாது செயல்படும் அவர்கள், பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ரீதியாகவும் இப்பிரதேச மக்களுக்குப் பெரும் பணியை ஆற்றுகிறார்கள். பொறுப்புள்ள தொழிலதிபர் ஒருவரின் அர்ப்பணிப்பினைத் தெளிவாக வெளிப்படுத்தியவாறு இந்தப் பணியை அவர்கள் செய்கிறார்கள்.
இவ்வாறு கருதும்போது, கடந்த குறுகிய காலத்திற்குள் கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கும், திகாமடுல்ல மக்களின் வாழ்விற்கும் சேர்த்துள்ள வலிமை மாபெரும் ஒன்றாகும். புத்தாக்கமான தொழில்நுட்பத்தைத் தொழிலிற்கு அறிமுகப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியின் புதிய பரிமாணங்களைத் திறந்துவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனம், உள்நாட்டு நிறுவனமாக எதிர்காலத்தில் மேலும் மேலும் தனது திறன்களின் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமையாக அமையும் என்பது உறுதியானதாகும். அதன் மூலம், கிழக்கு கிழக்கனாக தான் பெற்றுள்ள பெருமையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதற்கு கல்-ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தால் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
