Header Logo
Mogo Academy

பல்சுவை
தொலைபேசியால் தாக்கப்பட்ட கணவர் பலி!

Jul 13, 2026 - 06:18 PM -

0

தொலைபேசியால் தாக்கப்பட்ட கணவர் பலி!
Mobitel inner

அன்றாட வாழ்க்கையில் தொலைபேசி பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் தொலைபேசி தொடர்பானதாக இருக்கிறது. 

இந்த தொலைபேசியால் கணவன் மனைவி இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஒடிசாவில் அது போன்ற ஒரு சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள சிம்னிபதிபாடா என்ற இடத்தில் குடும்பத் தகராறின் போது மனைவி தனது கணவனை தொலைபேசியால் தலையில் தாக்கியதில் கணவர் ஒருவர் உயிரிழந்தார். 

சம்பத்தன்று இரவு குடும்ப பிரச்னையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 

வாய்ச்சண்டையில் தொடங்கிய இச்சண்டை பின்னர் அடிதடியில் முடிந்தது. சண்டையில் மனைவி தனது கையில் இருந்த தொலைபேசியால் கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் கணவர் படுகாயம் அடைந்தார். 

உடனே அவரை அங்குள்ள மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஓரளவு நிலைமை சீரடைந்ததால் கணவர் வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு அவரது நிலைமை திடீரென மோசமடைந்தது. உடனே அவரை மீண்டும் வைத்தியசாலையில் சேர்த்தனர். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

தொலைபேசியால் தாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


MOST READ

காணொளி
வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

Mobitel Upahara