Jul 19, 2026 - 03:02 PM -
0
கடந்த 2004ம் ஆண்டில் சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த "கிரி" படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து "வீரபாகு" என்கிற கதாபாத்திரத்தில் வடிவேலு கலக்கி இருப்பார்.
குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய காமெடி இன்று அளவிலும் பிரபலமாக உள்ளது.
தற்போது இந்த "வீரபாகு" கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து ஒரு அறிமுக இயக்குனர் ஒரு கதையை தயார் செய்து வடிவேலுவை அணுகி கூறியுள்ளார்.
இந்த கதை வடிவேலுவிற்கு பிடித்துள்ளதால் அவரும் பல தயாரிப்பாளர்களை அணுகியுள்ளார்.
ஆனால், வடிவேலுவின் வரலாறு தெரிந்த யாரும் அவரை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
