Jul 24, 2026 - 09:30 AM -
0
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
காலை 9.30 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில் நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரையில் வாய்மூல விடையை எதிர்பார்த்து முன்வைக்கப்படும் கேள்விகளுக்காக நேரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முற்பகல் 11 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் உள்ள வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,
