Header Logo
Mogo Academy

செய்திகள்
யோஷித ராஜபக்ஷ ஆஜராகாததால் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு!

Jul 24, 2026 - 04:27 PM -

0

யோஷித ராஜபக்ஷ ஆஜராகாததால் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு!
Mobitel inner

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. 

அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், தனது கட்சிகாரர் சுகவீனமுற்றுள்ளதாகவும், எனவே வழக்கு விசாரணைக்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார். 

சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். 

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் அமைந்துள்ள 730 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளார் எனக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara