Jul 24, 2026 - 07:01 PM -
0
தென் மாகாண சபையின் முன்னாள் பிரதான செயலாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டில் தென் மாகாண சபை உறுப்பினர்களின் ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட 16.5 மில்லியன் ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் மாகாணத்திலுள்ள பொது தன்னார்வச் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், அந்நாற்காலிகளைக் கொள்வனவு செய்யும்போது முறையான அரசாங்கக் கொள்முதல் நடைமுறைகளிலிருந்து விலகி, உற்பத்தி நிறுவனமொன்றைத் தெரிவுசெய்து அந்நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர் மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதான செயலாளர் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
