Header Logo
Mogo Academy

செய்திகள்
டெங்கு காய்ச்சல் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Jul 25, 2026 - 07:28 PM -

0

டெங்கு காய்ச்சல் - பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Mobitel inner

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் உள்ளதாகவும், இந்நிலைமை மேலும் அதிகரித்தால் வைத்தியசாலையின் கொள்ளளவை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

எனவே, தமது குழந்தைகளுக்குக் காய்ச்சல் காணப்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட வைத்தி நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

 

மேலும், வீடுகளிலிருந்து கை வைத்தியம் செய்வதன் மூலம் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதற்கான பொன்னான நேரம் வீணாகிறது என்றும், சுய சிகிச்சைகளைத் தவிர்த்து உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

 

 


MOST READ

காணொளி
பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

Mobitel Upahara