Header Logo
Mogo Academy

உலகம்
ஜேர்மனியில் பேரணி ஒன்றில் தாக்குதல் - சந்தேகநபர் சுட்டுக் கொலை

Jul 27, 2026 - 06:25 AM -

0

ஜேர்மனியில் பேரணி ஒன்றில் தாக்குதல் - சந்தேகநபர் சுட்டுக் கொலை
Mobitel inner

பெர்லினின் பேரணி நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டோர் மீது வேன் ஒன்றினால் மோதி தாக்குதல் நடத்திய சந்தேகநபரை ஜேர்மனிய பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். 

இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பின்னணி கொண்ட 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

டியர்கார்டன் பூங்காவில் சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இந்த வாகனத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். 

அவர்களில் சிலர் தாக்குதல்தாரி பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கண்டுபிடித்த நிலையில், அவர் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். 

இதனையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும் அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் சந்தேகநபர் உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பில் ஜேர்மனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara