Jul 27, 2026 - 02:23 PM -
0
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பெத்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தனது 17 ஆவது திரைப்படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன் ரங்கத்தலம் திரைப்படத்தில் கூட்டணி அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சைக்காக காயாம்பூதூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே, அவரது கை மணிக்கட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (27) நடைபெறும் இந்த அறுவை சிகிச்சைக்கு உடனிருப்பதற்காக அவரது தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி குடும்பத்தினர் அங்கு வருகை தந்துள்ளனர். நல்லபடியாக சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
