Jul 28, 2026 - 10:51 AM -
0
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கடந்த 15ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
