Header Logo
Mogo Academy

செய்திகள்
சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வு: 25 பேர் கைது!

Jul 28, 2026 - 05:14 PM -

0

சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வு: 25 பேர் கைது!
Mobitel inner

ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பிரதேசத்தில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகளை வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

 

இதன்போது இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த முற்றுகையின் போது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 14 படகுகள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உள்ளிட்ட பல உபகரணங்களையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஹொரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ரோஹணை ஓலுகலவின் ஆலோசனையின் பேரில் இந்த விசேட முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara