Jul 28, 2026 - 06:54 PM -
0
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சந்தேகநபரான சரித் அபேசிங்க மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) முற்பகல் பிணை வழங்கியது.
ரகித்த ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்தமையினால் அவர்களை சிறைக்காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், அவர் மீண்டும் இவ்வாறு சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
