Jul 29, 2026 - 05:08 PM -
0
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனகராஜன்குளத்திலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, அதே திசையில் பின்னால் வந்த கெப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது.
மோதிய பின்னரும் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
--
