Jul 29, 2026 - 10:15 PM -
0
அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது பாதுகாப்பை மீள் கட்டமைப்பு செய்து வரும் ஈரான், சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து ஏவக்கூடிய 400 விமான ஏவுகணை செலுத்து அமைப்புகளை பெறவுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
அதன் முதல் தொகுதியை ஈரான் எதிர்வரும் சில வாரங்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நன்கு தகவல் அறிந்த வட்டாரங்களுடன் உறுதிப்படுத்தி ரொயிட்டர்ஸ் இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.
இராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் ஈரானின் திறனில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்திய, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து, தனது குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்காக தெஹ்ரான் மேற்கொண்ட மிகப்பெரிய கொள்வனவதாக இது அமைந்துள்ளது.
இதற்காக ஈரான் 60-70 மில்லியன் டொலரை செலவிட்டு அதனை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தமானது, சீனாவில் தயாரிக்கப்பட்ட QW-12 மற்றும் FN-16 ஏவுகணைகள் உட்பட 300 முதல் 400 வரையிலான மனிதர்களால் கையாளக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளின் கொள்வனவை உள்ளடக்கியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், அந்த நிறுவனம் ஈரான் தரப்பிற்கும் சீன விநியோகத்தருக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகச் செயற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஈரானின் வெளியுறவு அமைச்சு இது தொடர்பில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.
