Header Logo
உலகம்
இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ: 5 பேர் பலி, 41 பேர் மாயம்!

Aug 2, 2026 - 06:57 PM

இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ: 5 பேர் பலி, 41 பேர் மாயம்!
Mobitel inner

சுமார் 250 பயணிகளுடன் பயணித்த இந்தோனேசிய பயணிகள் கப்பலொன்று அந்நாட்டு கடற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இவ்விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 41 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலவேசியின் மகசார் நோக்கிப் பயணித்த இக்கப்பல், மதுரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. 

கப்பலில் திடீரென தீ பரவியதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட அதன் மாலுமி, இது குறித்து அந்நாட்டு தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகத்திற்கு உடனடியாக அறிவித்து உதவியைக் கோரியுள்ளார். 

மாயமானவர்களைக் கண்டறிவதற்கும், விபத்துக்குள்ளான ஏனைய பயணிகளை மீட்பதற்கும் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரும் நிவாரணக் குழுவினரும் இணைந்து தற்போது விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

 


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara