Aug 2, 2026 - 10:28 PM
மஹர சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 104 கைதிகளும், அச்சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பிலான சந்தேகநபர்கள் என மஹர சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹண களப்பத்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், இவ்வாறு வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை வரை மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இது தொடர்பில் எவ்வித பயமும் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களின் உறவினர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

