Header Logo
செய்திகள்
மொட்டு கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சர்வஜன அதிகாரத்துடன் இணைவு

Aug 9, 2026 - 06:45 PM

மொட்டு கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சர்வஜன அதிகாரத்துடன் இணைவு
Mobitel inner

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள் குழுவொன்று சர்வஜன அதிகாரத்துடன் இணைந்துள்ளது. 

சர்வஜன அதிகாரத்தின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகமவுடன் இக்குழுவினர் இன்று (09) நாவலப்பிட்டியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்கள். 

கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த கே.எல்.ஏ. குணசிங்க, தானும் தனது குழுவினரும் 'சர்வஜன அதிகாரத்துடன் உத்தியோகபூர்வமாக இணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிவித்தார். 

இக்குழுவினரின் இணைப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திலும் அமுனுகம, சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியே நேரடியாகக் காரணம் எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அவ்வாறாயின் நாட்டிற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை எனக் குறிப்பிட்டார். 

இதேவேளை, மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பு மத்தியிலும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையானது, தற்போதைய அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், அனைத்துக் கட்சிகளும் தற்போது அதிக வாக்கு வங்கியிலிருந்து குறைந்த வாக்கு வங்கிக்குச் சரிந்துள்ள போதிலும், சர்வஜன அதிகாரம் மட்டுமே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி தற்போது மிகவும் வலுவான ஒரு வாக்கு வங்கியை கட்டியெழுப்பியுள்ளது என்றும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara